இலங்கைசெய்திகள்

இலங்கையின் வான்பரப்பு இந்தியாவிற்கு விற்பனை ஹரின் பகீர் குற்றச்சாட்டு

நாட்டின் வான்பரப்பானது இந்தியாவிற்கு 29 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று (22) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையில் எனறுமில்லதாவாறு மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். மக்கள் வீதிகளில் செத்து மடிகின்றனர்.

இலங்கைப் பெருங்கடல் மற்றும் நிலம் சீனாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. துறைமுகம் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது எமது நாட்டின் வானமும் இந்தியாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button