இலங்கைசெய்திகள்

வலி.தென்மேற்குப் பிரதேசசபையில் பிச்சை எடுத்த உறுப்பினர்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்தடை, பஸ்கட்டண அதிகரிப்பு என மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (18) வலி.தென்மேற்கு பிரேசசபை உறுப்பினர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய அமர்வில் கலந்து கொள்வதற்கு உறுப்பினர்கள் குப்பி விளக்குகள், இலாம்புகள் மெழுகு திரிகள் உள்ளிட்டவற்றுடன் சபை அமர்வில் கலந்து கொண்டனர் .

இதேவேளை சண்டிலிப்பாய் வட்டார உறுப்பினர் ஜெசிதன் பிச்சைக்காரனாக வேடம் தாங்கி சபையில் பிச்சை எடுத்தமையை இன்றைய சபை அமர்வில் அவதானிக்ககுடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button