![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/bus-private.jpg?resize=536%2C381&ssl=1)
நாட்டில் நாளை (14) முதல் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடமாட்டாது என தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
அதிகரித்துள்ள டீசல் விலைக்கு மானியம் வழங்க வேண்டும் அல்லது பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டும். இல்லையேல் பஸ்களை பணியில் ஈடுபடுத்த முடியாது என தனியார் பஸ்கள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.