இலங்கைசெய்திகள்

“சிறுதுளி பெரு வெள்ளம் “
கராஜ் போய்ஸின் 5 வது வாழ்வாதார திட்டம் கையளிப்பு

கனடாவை மையப்படுத்தி உலகம் பூராகவும பரந்து இருக்கும் கராஜ் போய்ஸ் நண்பர்கள் வட்டத்தினால் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வாழ்வாதார உதவித்திட்ட வரிசையில் புதுகுடியிருப்பைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு பிள்ளையார் ஸ்ரோர்ஸ் என்னும் வர்த்தக நிறுவனத்தை திறந்து கையளிக்கும் நிகழ்வு கடந்த 01.03.2022 அன்று நடைபெற்றது.

இந் நிகழ்வு கராஜ் போய்ஸ் நண்பர்கள் வட்டம் அமைப்பின் தாயக இணைப்பாளர் இ.ஜனதன் தலைமையில் காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு விருந்தினர்களாக கல்வியங்காடு மக்கள் வங்கி முகாமையாளர் க.சிறிதரன், இலங்கை போக்குவரத்துச்சபை முகாமைத்தர உத்தியோகத்தர் க.காண்டிபன், கராஜ் போய்ஸ் நண்பர்கள் வட்டத்தின் உறுப்பினர் செ.பிரதீபன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் விஜயகுமார் மற்றும் சமூக ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர்.

புதிதாக அமைக்கப்பட்ட வர்த்தக நிலையத்தினை மேற்குறித்த அமைப்பின் உறுப்பினர் செ.பிரதீபன் அவர்களால் நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டது.

இவ்வாழ்வாதர உதவித்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு மேற்குறித்த அமைப்பினரால் 3 லட்சத்து 50000 ரூபா நிதியும், குறித்த பயனாளியின் உறவினர்களால் ஒருலட்சத்து 50000 ரூபா நிதிப்பங்களிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button