இலங்கைசெய்திகள்

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் அராஜகப் போக்கை கண்டித்து வலி.தெற்கு பிரதேச சபையினரால் போராட்டம் முன்னெடுக்கப் படவுள்ளது

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் எலலை மீறிச்செல்வதாக வலி.தெற்கு பிரதேசசபை உறுப்பினர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அடவாடித்தனத்தைக் கண்டித்து வலி.தெற்குப் பிரதேசசபையால் வலி. தெற்குப் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (25) சபையின் கூட்டம் இடம்பெற்ற போது அப்பிரதேசத்தின் அபிவிருத்திகள் பற்றி ஆராயப்பட்டது. அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு பல இடையூறுகளை விளைவிப்பதாகவும், அவர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்து செயற்படுவதாகவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையிலேயே, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் எல்லைமீறிய அராஜகப்போக்கை கண்டித்து எதிர்வரும் புதன்கிழமை வலி.தெற்கு பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் ஒன்றை நடத்துவதாக சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button