![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/Screenshot_20220220_210649.jpg?resize=232%2C156&ssl=1)
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாகத் தெரிவும் இன்று (20) கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இடம்பெற்றது.
புதிய நிர்வாகத்தின் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராக சிறீகஜன் தெரிவுசெய்யப்பட்டார். செயலாளராக கு.ஜெயந்திரன் அவர்களும், உபதலைவராக லியோதர்ஷனும், உப செயலாளராக தர்மினி ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
வடக்கு மாகாணத்தின் இணைப்பாளராக சர்வானந்தா, கிழக்கு மாகாணத்தின் இணைப்பாளராக சரவணபவன், மலையகத்தின் இணைப்பாளராக சிவகுமார் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தினை சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர்களை உள்ளடக்கி இந்த புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.