இலங்கைசெய்திகள்

தமிழர்களின் இதயபூமியை அபகரிப்பதற்கு எதிராக எதிர்ப்பு போராட்டம்

வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் இதய பூமி என வர்ணிக்கப்படும் கொக்கிளாய் தொடக்கம் நாயாறு வரையான தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிக்கு எதிராக எதிர்ப்பு போராட்டம் நாளை (12) முன்னெடுக்கப்பட உள்ளது.

கனிய மணல் அகழ்வு என்னும் போர்வையில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் நில அளவீடு மேற்க்கொள்ளப்பட்டு சுவீகரிப்பதற்கு அரசு கடுமையான முயற்சி மேற்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தமிழ்மக்களின் எல்லைக்கிராமங்களை அரசு அபகரிப்பதைக் கண்டித்து கொக்கிளாய் கிராம மக்களால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று நாளை முன்னெடுக்கப்பட உள்ளது.

கொக்கிளாய் பாடசாலைக்கு முன்பாக காலை 9.00 மணியளவில் இப்போராட்டம் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button