சமீபத்திய செய்திகள்

மனோகரா அபாரம் இண்டாவது சுற்றில் அனல் பறக்கும் போட்டிகள் ஆரம்பம்

ஊரெழு றோயல் விளையாட்டு கழகத்தால் வடமாகாண ரீதியில் நடத்தப்பட்டு வரும் வடக்கின் சமர் தொடரின் இன்றைய (16) போட்டியில் வடமராட்சி மனோகரா வி.கழகம் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் வடமராட்சி மனோகரா வி.கழகத்தை எதிர்த்து தீவகம் சென்.தேம்ஸ் வி.கழகம் மோதியது. விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வடமராட்சி மனோகரா வி.கழகம் 8.0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

வடக்கின் சமரின் இரண்டாவது சுற்று எதிர்வரும் புதன்கிழமை முதல் ஆரம்பமாகும். (19.10.2022 -புதன்கிழமை)

புதன் கிழமை இடம்பெறும் முதலாவது போட்டியில், இளவாலை யங்கென்றிஸ் வி.கழகத்தை எதிர்த்து உரும்பிராய் திருக்குமரன் வி.கழகம் மோதவுள்ளது.

இரண்டாவது போட்டியில் நவாந்துறை சென்மேரிஸ் வி.கழகத்தை எதிர்த்து நவாந்துறை சென்.றோக்ஸ் வி.கழகம் களமாடவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button