இலங்கைசமீபத்திய செய்திகள்

யாழ்.பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின மூன்றாம் நாள் – ஏழாவது அமர்வு யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இன்று (08)ஆரம்பமாகியது.

பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதன் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். இன்றைய அமர்வில், துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, பதிவாளர் வி.காண்டீபன், நிதியாளர் கே. சுரேஸ்குமார், பதில் நூலகர் எஸ்.கேதீஸ்வரன் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், பேரவை உறுப்பினர்கள், மற்றும் விரிவுரையாளர்கள், விருந்தினர்கள், பட்டம் பெறும் மாணவர்களின் சார்பில் அழைக்கப்பட்ட பெற்றோர் – விருந்தினர்கள், பட்டம் பெற்ற மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இன்று மூன்றாம் நாள் இடம்பெறவுள்ள ஏழாவது, எட்டாவது அமர்வுகளில் 432 பேர் பட்டங்களையும் தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button