விளையாட்டு

வடக்கின் சமர் ஆரம்பமாகின்றது

ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகத்தால் வடமாகாண ரீதியில் நடத்தப்படும் “வடக்கின் சமர்” உதைபந்தாட்ட போட்டிகள் நாளை முதல் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமாகின்றன.

நாளை மாலை 3.30 மணிக்கு ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் கஜந்தன் தலைமையில் ஆரம்ப நிகழ்வுகளுடன் போட்டிகள் ஆரம்பமாகின்றன.

நாளையதினம் இடம்பெறும் முதலாவது போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் வி.கழத்தை எதிர்த்து திருநெல்வேலி மகாத்மா வி.கழக அணி மோதவுள்ளது.
தொடர்ந்து இடம்பெறும் இரண்டாவது போட்டியில், குருநகர் பாடுமீன் வி.கழத்தை எதிர்த்து நியூவாரியர்ஸ் அணி மோதவுள்ளது.

இப்போட்டிகளுக்கு ஐவின்ஸ் தமிழ் இணையத்தளம் ஊடக அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button