இலங்கைசமீபத்திய செய்திகள்

யாழில் தொடரும் போதைப் பொருள் கைது வேட்டை – ஹெரோயினுடன் இரு பெண்கள் உட்பட மூவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த மூவர் யாழ்ப்பாண பொலிஸரால் நேற்று(03) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரியாலை மணியந்தோட்டப் பகுதியில், ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த நிலையில், கணவனும் (வயது – 42), மனைவியும் (வயது -36) கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6.8 கிராம் ஹெரோயின் பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கொக்குவில் பகுதியில் 2.5 ஹெரோயின் போதைப்பொருளுடன் 40 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்க்கொள்ளப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button