சமீபத்திய செய்திகள்செய்திகள்விளையாட்டு

வீரர்களின் திறமைக்கு களம் அமைக்கின்றது UKMPL – 2022

UKM பிறிமீயர் லீக் துடுப்பாட்ட சுற்றுப்போட்டிக்கான சீருடை அறிமுக நிகழ்வு இன்று (26) ஊரெழு முத்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

UKM பிறிமீயர் லீக்கின் தலைவர் சி.வினோத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், விருந்தினர்களாக தீபன் பெயின்ற்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தீபன் மற்றும் வலி.கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் சி.நிமல் ஆகியோரும் பங்கெடுத்திருந்தனர்.

இப்போட்டியில் உரும்பிராய், ஊரெழு, குப்பிளான் மற்றும் மயிலங்காடு பிரதேசங்களை உள்ளடக்கிய அணிகள் பங்கெடுக்க உள்ளதுடன், அணிகளின் உரிமையாளர்களிடம் சீருடைகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

இப்போட்டிகள் நாளை ஊரெழு முத்தமிழ் மற்றும் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button