இலங்கைசெய்திகள்

26 வயது இளைஞனுடன் கள்ளக்காதலில் குதூகலித்த பெண்ணை – நாசமாக்கிய ஆசாமி கைது

38 வயதான திருமணமான பெண்ணை சி.ஐ.டி என மிரட்டி பாலியல் பலத்காரம் செய்த ஆசாமி பொலீஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் திருமணமான நிலையிலும் கணவனை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். எனினும் குறித்த பெண்ணுக்கு 26 வயதுடைய இளைஞனோடு தகாத உறவு இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 26 ஆம் திகதி குறித்த பெண்ணும், இளைஞனும் நுவரெலியாவில் உள்ள பூங்கா ஒன்றில் தனியாக பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த இடத்திற்கு வந்த நபர் தன்னை சி.ஐ.டி என அறிமுகப்படுத்திக்கொண்டு இருவருக்கும் இடையிலான வயது ஒத்துப்போகவில்லை என மிரட்டியுள்ளார்.

அவ்விடத்தில் இருந்து இளைஞனை மிரட்டி துரத்திய நபர் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடப்போவதாக மிரட்டி குறித்த பெண்ணை பாலியல் பலத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணால் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பெண்ணை பாலியல் பலத்காரம் செய்த ஆசாமி பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button