இலங்கைசெய்திகள்

துப்பாக்கிச்சூடு இளைஞர் உயிரிழப்பு

வத்தளை – எலக்கந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்சூட்டில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்க்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டை மேற்க்கொண்டவர் தப்பித்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளைஞர் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button