இலங்கைசெய்திகள்

18 வயதில் காதல் – காதலியின் தந்தை தாக்குதல் – இளைஞன் ஆற்றில் குதித்து மாயம்

18 வயதான இளைஞனை காதலியின் தந்தை தாக்கியதால் குறித்த இளைஞன் ஆற்றில் குதித்து காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் களுத்துறைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. களுத்துறைப் பாலத்தில் இருந்து குதித்தே இளைஞன் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

20 மணித்தியாலங்களுக்கு மேலாக பொலிஸாரும், படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்க்கொண்ட போதும் இளைஞனை இதுவரையில் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button