இலங்கைசெய்திகள்

வட்டுக்கோட்டையில்
13வது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகனப்பேரணி

13வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் வட்டுக்கோட்டையில்
பேரணி ஒன்று தமிழ் தேசியமக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வட்டுக்கோட்டை அலுவலகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட வாகனப்பேரணியானது வட்டுக்கோட்டை முழுவதும் முன்னெடுக்கப்பட்டது.

பிரேத பெட்டியினை தாங்கியவாறு முன்னெடுக்கப்பட்ட பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரான கனகரத்தினம் சுகாஷ், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்கள் அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button