இலங்கைசெய்திகள்

நாட்டைச் சீரழித்தனர் – மஹிந்த பசில் மீது வழக்குத்தாக்குதல்

முன்னாள் பிரதமர் மஹிந்தராஜ பக்ச மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜ பக்ச சகோதர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து டொலர்களை கையிருப்பில் இல்லாமல் செய்தனர் என்ற குற்றதிற்காகவே அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

திறந்த பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர், பேராசிரியர்கள் ஆகியோர் இணேந்தே இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.

மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், திறைசேரியின் முன்னாள் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர உள்ளிட்ட சிலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button