இலங்கைசமீபத்திய செய்திகள்

யாழில் தீ விபத்து வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியது

யாழ்ப்பாணம் மாநகரில் அமைந்திருந்த தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வர்த்தக நிலையம் தீயில் எரிந்து முற்றாக நாசமாகிபோயுள்ளது.

இச்சம்பவம் இன்று (22) அதிகாலை பதிவாகியுள்ளது. ஶ்ரீதர் தியேட்டருக்கு முன்பாக உள்ள பிளாஸ்ரிக் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையமே முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

இத்தீவிபத்துக்கான காரணம் மின்னொழுக்காக இருக்கலாம் என கருதப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button