![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/Dead2-3.jpg?resize=708%2C398&ssl=1)
தற்போது யாழ்.மாவட்டத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக வீட்டின் மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்ததில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியைச் சேர்ந்த 80 வயதுடைய சுப்பிரமணியம் ஏகம்பரநாதன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
பலத்த காற்று வீசியதில் வீட்டு முற்றத்தில் நின்ற தென்னை மரம் முறிந்து வீழ்ந்ததிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.