இலங்கைசெய்திகள்

அதிர்ஷ்டாலாப வினாச் சீட்டிழுப்பு

வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் VILLAGE 2CITY CLUB அமைப்பினரால் நடத்தப்படும் அதிர்ஷ்டலாப வினாச் சீட்டிழுப்பு நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது.

இன்று (17) மாலை 3.00 மணிக்கு மாங்குளம் உயிரிழை பராமரிப்பு நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இவ் அதிர்ஷ்ட வினாச் சீட்டிழுப்பிற்கு சமூக சிந்தனையின் நோக்கின் அடிப்படையில், சமூக ஆர்வலர்களால் பரிசில்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

அவ்வகையில், முதல் பரிசினை விசுவமடு – கிளிநொச்சியைச்சேர்ந்த ராணி பார்ம் நிறுவனத்தினர், இராண்டாம் பரிசினை ரொரன்றொ இளையோர் நட்சத்திர அமைப்பு, மூன்றாவது பரிசினை Virtual Enter Prises நிறுவனத்தினர் ஆகியோர் வழங்கியுள்ளனர்.

அத்துடன், ஆறுதல் பரிசுகளை மட்டுவில் தெற்கு சந்நிதி முருகா ஸ்ரோர்ஸ் உரிமையாளர், மட்டுவில் தெற்கு சுகந்தினி வாணிப உரிமையாளர், அல்வாய் நவரெட்ணா உணவகம், தர்மபுரம் எல்.அபிஸ் ரான்ஸ்போட் நிறுவனத்தினர், தர்மபும் ஏ.ஜே.புத்தக நிலையத்தினர் ஆகியோர் வழங்கி உள்ளனர்.

மேலும், இவ் அதிர்ஷ்டலாப வினாச் சீட்டிழுப்பிற்கான அதிர்ஷ்ட இலக்கங்களை கணிப்பிடுவதற்கான பொறியானது இவ் அமைப்பின் அங்கத்துவ மாணவன் குகதாஸ் சர்விகன் அவர்களால் ஆக்கப்பட்டு வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இவ் அமைப்பானது தாயகம் பூராகவும் பத்து வருடங்களைக் கடந்தும் சிறப்புற பல மக்கள் சேவைகளை ஆற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button