இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்முக்கிய செய்திகள்

மண்மேடு சரிந்து விழுந்து மூவர் பரிதாப உயிரிழப்பு!

கண்டி, வத்துகாமம் – மடவளை பகுதியில் இன்று பிற்பகல் ஏற்பட்ட மண்சரிவில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மற்றுமொருவர் சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் பன்வில, பூஜாபிட்டிய, கெடபுலாவ ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புதிதாக கட்டப்படும் வீட்டின் அருகே, பாதுகாப்புச் சுவர் கட்டுவதற்காக குழி தோண்டிக் கொண்டிருந்தபோது மேலே இருந்த மண்மேடு இடிந்து விழுந்துள்ளது.

அந்த இடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நால்வர், குறித்த மண்மேட்டு சரிவில் சிக்கியுள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

காயமடைந்த நபர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதுடன் சம்பவம் தொடர்பில் வத்துகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button