இலங்கைமுக்கிய செய்திகள்

தகவல் அறியும் சட்டத்தை செயலிழக்கச் செய்ய அரசு முயற்சி! – மைத்திரி குற்றச்சாட்டு

தகவல் அறியும் சட்டத்தை செயலிழக்கச் செய்ய அரசு முயற்சிக்கின்றது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எம்.பி. குற்றம் சுமத்தினார்.

கேகாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தகவல் அறியும் சட்டத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்துவது கவலையளிக்கின்றது.

கூட்டணியொன்றை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு அதனை ஏற்படுத்தியவர்களிடமே உள்ளது.

அதனைச் சரிவர நிறைவேற்றாத பட்சத்தில் கூட்டணி பிளவுபடுவதற்கான வாய்ப்புள்ளது” – என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button