![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/22-6278ea3ae6377-md.webp?resize=360%2C240&ssl=1)
இன்றைய தினம் மக்களின் அமைதியான போராட்டத்தைக் கலைத்து வன்முறையைத் தூண்டி விட்ட மகிந்த ராஜபக்சவையும் வன்முறையில் ஈடுபட்ட அவரது சகாக்களையும் கைது செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடந்த வன்முறைக்கு முழுக் காரணம் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.