இலங்கைசெய்திகள்

மீண்டும் ஆரம்பமாகும் புகையிரத சேவை!!

Railway

 அனுராதபுரம் – ஓமந்தை இடையிலான ரயில் போக்குவரத்து மீண்டும் அடுத்த மாதம் ஆரம்பமாகும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு- கோட்டை  தொடக்கம்  காங்கேசன்துறை வரையான சேவை வழமையான நேர அட்டவணையின் அடிப்படையில்  இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனுராதபுரம் – ஓமந்தை இடையிலான ரயில் மார்க்கம் திருத்தப்பணிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டிருந்தது.

தற்போது, 62 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த ரயில் மார்க்கம் இந்திய கடன் உதவியின் கீழ் 33 பில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

புனரமைக்கப்பட்ட ரயில் மார்க்கத்தில் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் பயணிக்க முடியுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button