![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/61addadecba12.jpg?resize=708%2C425&ssl=1)
தீவிரவாதிகளால் பாகிஸ்தான் – சியால்கொட் பகுதியில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் இறுதிக் கிரியைகள் நேற்று (08) பிற்பகல் கனேமுல்ல – பொல்ஹேன பொது மயானத்தில் இடம்பெற்றது.
பிரியந்த குமார தியவடனவை நினைவு கூரும் வகையிலும் இந்தக் கொடூர சம்பவத்தை கண்டித்தும் பாகிஸ்தானில் நாளை (10) விசேட கண்டன தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி இந்த சம்பவம் தொடர்பில் 140க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 34 பேர் பிரதான சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பிரியந்த குமாரவின் படுகொலை தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அஸ்கிரிய பீடாதிபதி வணக்கத்துக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் கடிதம் மூலம் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த எடுத்த நடவடிக்கைக்கு தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.