![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/download-2-3.jpeg?resize=275%2C183&ssl=1)
இன்று மாலை 4 மணிக்கு விசேட கட்சி தலைவர் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிலைமை தொடர்பாக கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக அவசர கட்சித் தலைவர் கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் தனது டுவிட்டர் பதிவிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.