Breaking Newsஇலங்கைசெய்திகள்

புலைமைப்பரிசில் வினாத்தாள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு!!

Great 5 exam

 சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற  ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் பல சிக்கல்கள் காணப்பட்டதாக ஊடக சந்திப்பு ஒன்றில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அவர்களின் பெற்றோர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.

பாதிப்பிற்கு உள்ளான மாணவர்களின் பெற்றோர்கள் அமைப்பினால் கண்டியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தீர்வு வழங்கும் வகையில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் குறைக்கப்பட வேண்டும் எனவும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button