![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/270313582_5027229580620962_6841777784869977509_n-768x544-1.jpg?resize=708%2C502&ssl=1)
மத்திய அரசின் கூட்டுறவை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக 5000 Coop_Fresh நிலையங்களை திறப்பதன் ஒரு அங்கமாக திருகோணமலை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கன்னியா கிளைக்கான Coop_Fresh நிலையம் கடந்த 30.12 2021 மாலை 3.00 மணிக்கு கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
திருகோணலை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் திரு. நவரெத்தினம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கௌரவ ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்கள் கலந்துகொண்டதுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஏ.பி.கபில நுவான் அத்துகோரல அவர்களும், விவசாய கூட்டுறவு அமைச்சின் செயலாளர் கிழக்கு மாகாணம் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களும், கௌரவ ஆளுனரின் செயலாளர் திரு.L.P.மதனாயக்க அவர்களும் , கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ஜனாப்.A.C.M.அஸ்மி அவர்களும் கலந்துகொண்டனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/270453059_5027222320621688_3880329227339507210_n.jpg?resize=708%2C399&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/271055942_5027227593954494_4926098017243374989_n-768x623-1.jpg?resize=708%2C574&ssl=1)
ஏ.ஜே.எம்.சாலி
திருகோணமலை