இலங்கைசெய்திகள்

மாமனாரால் சிறுமி ஒருவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

Child abuse

முல்லைத்தீவு பகுதியில் தாயாரின்றி தந்தை மற்றும் சகோதரனுடன் வாழ்ந்து வந்த 13 வயதுச் சிறுமியை மாமன் முறையாக ஒருவர் வலுக்கட்டாயமாக பாலியல் துஷ்பிரயோகங்கம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி வீட்டில் உறவினர்கள் இல்லாத நிலையில் வீட்டிற்குள் சென்ற மாமன் தனிமையில் இருந்த சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இவ்விடயத்தை பாடசாலை ஆசிரியரிடம் குறித்த சிறுமி தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், பொலிஸாரின் உதவியுடன் சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளைப் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். மாமனார் ஏற்கனவே 20 வயதான குறித்த சிறுமியின் சகோதரயையும் இவ்வாறு துஷ்பிரயோகம் செய்துள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளது எனக் கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button