இலங்கைசெய்திகள்

மனைவியை அநாகரீகமாகப் புகைப்படம் எடுத்தவர்களைத் தட்டிக்கேட்ட கணவன் மீது சரமாரியான தாக்குதல்!!

Attack

 கச்சான் வாங்க வந்த பெண்ணொருவரை வியாபரிகள் அநாகரீகமாகப் புகைபடம் எடுத்த நிலையில் அதனைத் தட்டிகேட்கச் சென்ற கணவன் மீது வியாபாரிகள் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவம் யாழ்ப்பாணம்- சுன்னாகத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது .

தனது கணவருடன் பொருட்கள் வாங்க சென்ற மனைவி,  கச்சான் வாங்க சென்றபோது சில வியாபாரிகள் பெண்ணை அநாகரீகமாக புகைப்படம் எடுத்துள்ளனர்.

இந்நிலையில் இதனை அவதானித்த கணவர் , வியாபாரிகளுடன் முரண்பட்டபோது கணவர் மீது அவர்கள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அண்மைக் காலமாக தமிழர் பகுதிகளில் இவ்வாறு அநாகரீகப்போக்கு அதிகரித்துள்ளது எனவும் இவ்விடயம் குறித்து அதிக கவனம் எடுக்கப்படவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிடுள்ளனர். 

Related Articles

Leave a Reply

Back to top button