![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/113942951__112292769_gotabayarajapakshatoday-1-1-1-2.jpg?resize=640%2C360&ssl=1)
தேர்தலில் 65 லட்சம் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் தொடர்ந்தும் நான் ஜனாதிபதியாக நீடிப்பேன் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது நாட்டில் எனக்கு எதிராக இடம்பெறும் போராட்டங்களை மக்கள் முன்னெடுக்கவில்லை. எதிர்கட்சியினரே மக்களுக்கு பின்னால் நின்று போராட்டங்களை நடத்துகின்றனர்.
ஜனாதிபதி தேர்தலில் எனக்கு எதிராக களமிறங்கிய சஜித், அநுர ஆகியோரே எனக்கு எதிரான போராட்டங்களை நடத்துகின்றனர். எதிர்கட்சியினரே வீதிகளில் பொங்குகின்றனர்” – என்றார்.