இலங்கைசெய்திகள்

பீரிஸ் – ஜெய்சங்கர் டில்லியில் முக்கிய சந்திப்பு!

இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை இன்று சந்தித்தார்.

இது குறித்து ருவிட்டர் பதிவொன்றை இட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மிகவும் வினைத்திறனாக இந்தப் பேச்சு அமைந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை – இந்திய இராஜதந்திர உறவின் 75 ஆம் ஆண்டு பூர்த்தியைப் பொருத்தமான முறையில் அனுஷ்டிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

பொருளாதாரத்தை சக்திமயப்படுத்தல், அதற்காக சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக அவதானம் செலுத்தப்பட்டது.

அத்துடன் இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினை குறித்தும் கலந்துரையாடப்பட்டது எனவும், இந்த விடயத்தில் இரண்டு தரப்புக்கும் இடையிலான பரஸ்பர பொறிமுறை ஒன்றை விரைவில் கொண்டுவர வேண்டும் என இணங்கப்பட்டது எனவும் எஸ். ஜெய்சங்கர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button