இலங்கைசெய்திகள்

கச்சதீவு திருவிழாவில் இலங்கை இந்திய பக்தர்கள் கலந்துகொள்ளஅனுமதி

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில் இலங்கை, இந்திய பக்தர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும், கொரோனாத் தொற்றுக் காரணங்களைக் கருத்தில் கொண்டு இரண்டு நாடுகளில் இருந்தும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் 11 ,12 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button