இலங்கைசெய்திகள்

பாடசாலையில் அடிதடியில் ஈடுபட்ட மாணவர்கள் மருத்துவமனையில்!!

school

காலி நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் தலைவர் ஒருவர் நேற்று (03) அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் மூவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான மூன்று மாணவர்களும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் தாக்குதலினால் சிறு காயங்களுக்கு உள்ளான மூன்று மாணவர்களும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button