![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/22-6288bfb31690d.jpeg?resize=600%2C400&ssl=1)
உயர் ரகத்தை 25 நாய்களை வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கள் கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் மோப்ப நாய்கள் பிரிவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பொலிஸ் விநியோக சேவைப் பிரிவு இந்த நாய்களைக் கொள்வனவு செய்ய உள்ளது.
வெடிப்பொருட்கள் செயலிழப்பு உள்ளிட்ட பணிகளுக்காகவே இந்த நாய்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் 2019 இற்குப் பின்னர் நாய்கள், குதிரைகள் பொலிஸ் பிரிவில் வாங்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.