இலங்கைசெய்திகள்

மாந்திரீகரின் தலையைத் துண்டித்து கங்கையில் வீசிய இளைஞன்!!

Murder

(நமது விசேட நிருபர்)

மாந்திரீகர் ஒருவர் தலை துண்டித்துக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் மாத்தறை – அக்குரஸ்ஸ, திப்போடுவ பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையின் தலையே அவரது வீட்டில் வைத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் மகளும், மனைவியும் படுகாயமடைந்த நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 29 வயது சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேகநபர், உயிரிழந்தவரின் வீட்டுக்கு அருகிலுள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, துண்டிக்கப்பட்ட தலையைச் சந்தேகநபர் எடுத்துச் சென்றுள்ள நிலையில் அதனை நில்வளா கங்கையில் வீசியிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button