![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/01/image-39.png?resize=600%2C400&ssl=1)
நேற்று நண்பகல், கொழும்பு பல்கலைக்கழகத்தின் 3ஆம் வருட மாணவியொருவர், காதலனால் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
மாணவியை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபர் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன்படி, தமது காதலி வேறு ஒருவருக்குச் சொந்தமாகிவிடுவார் என்ற அச்சத்தில் தான் அவரை கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தான் கூறியதை அவர் ஏற்க விரும்பவில்லை எனவும், அதன் காரணமாக வேறு வழியின்றி அவரை கொலை செய்ததாகவும் சந்தேகநபரான இளைஞர் மேலும் தெரிவித்துள்ளதாக காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மேலும், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி சந்தேகநபரான இளைஞர் இந்த கொலையை நன்கு திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.