இலங்கைசெய்திகள்

டிக்டொக் விவகார கொலை – அறுவர் சிறுவர் பாதுகாப்பு மையத்தில்!!

merder

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் டிக்டொக் காணொளியை மையப்படுத்தி நேற்று முன்தினம்(03) ஏற்பட்ட மோதலில் ஆண் ஒருவர் கொல்லப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் கைதான 6 சந்தேக நபர்களும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை சிறுவர் பாதுகாப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை கொழும்பு மேலதிக நீதிவானிடம் முன்னிலைப்படுத்திய போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்திருந்தது.

கொழும்பு – கிராண்ட்பாஸ் – மாதம்பிட்டி பகுதியில் டிக்டொக் காணொளியை மையப்படுத்தி இரண்டு தரப்பினருக்கிடையே மோதல் இடம்பெற்றிருந்தது.

இதன்போது, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button