![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/22-6284b6d039d17.jpg?resize=600%2C400&ssl=1)
சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு த்தில் கல்வி கற்கும் மாணவன் தெய்வேந்திரம் திருக்குமரன் தெரிவாகியுள்ளார்.
63வது சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்காக இந்த மாணவன் நோர்வே செல்லவுள்ளார். இவரைப் பாடசாலைச் சமூகமும் சமூக ஆர்வலர்களும் நலன்விரும்பிகளும் பாராட்டியுள்ளனர். இலங்கை சார்பாக வடமாகாணத்தில் தெரிவாகிய ஒரே ஒரு தமிழ் மாணவன் தெய்வேந்திரம் திருக்குமரன் என்பதுடன் இவர் தற்போது மூன்றாவது தடவையாக இப்போட்டிக்குச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இவரது சாதனையால் பாடசாலைச் சமூகம் பெருமை கொள்வதாக கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.