இலங்கைசெய்திகள்

புத்தாக்க அரங்க இயக்கம் நடத்தும் மெய்நிகர் இணையவழி பன்னாட்டு அரங்க கதையாடல் தொடர்!!

Innovative theater movement

புத்தாக்க அரங்க இயக்கம் நடத்தும் மெய்நிகர் இணையவழி பன்னாட்டு அரங்க கதையாடல் தொடர் 11 நிகழ்வு தை மாதம் 2,3,4,5,6 ஆகிய திகதிகளில் இரவு 7 மணிக்கு புத்தாக்க அரங்க இயக்கத்தின் பணிப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் இடம் பெறவுள்ளது.

இந் நிகழ்வில் 2.1.2022 ஞாயிற்றுக்கிழமை கலைஞானச்சுடர் சுபாஷினி பிரணவன் வாழ்விலும் நாடகமும் 3.1..2022 திங்கட்கிழமை திருமறைக்கலாமன்ற ஓப்பனைக்கலைஞர் அன்று யூலியஸ் நாடகத்தில் ஓப்பனையின் வகிபங்கு 4.01.2022 செவ்வாய்க்கிழமை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முதல்வர் வீ.கருணலிங்கம் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பாரம்பரிய நாடகங்களின் ஆற்றுகையும் பேணுகையும் 05.01.202 புதன்கிழமை டெல்லி தேசிய நாடகப்பள்ளி பேராசிரியர் கே.எஸ்.ராஜேந்திரன் இந்திய அரங்கும் தமிழ் அரங்கும் சமகாலப் போக்கும் 06.01.2022 கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை சிரேஸ்ர விரிவுரையாளர் வீ. கே.ரவிச்சந்திரன் கிழக்கு இலங்கை சூழலில் உள்ள பிரதிகளற்ற நவீன நாடகங்கள்
ஆகிய விடயங்களில் கதையாடவுள்ளார் .

நிறைவுரையினை புத்தாக்க அரங்க இயக்கத்தின் நிர்வாகப் பணிப்பாளர் எஸ்.ரி.அருள்குமரன் வழங்கவுள்ளார்கள்.இவ் இணையவழி அரங்க கதையாடல் நிகழ்வில் ஆர்வமுடையவர்களை சூம் செயலி இலக்கம் 647334 8261கடவுச் சொல் ITM ஊடாக இணைந்து கொள்ளுமாறு புத்தாக்க அரங்க இயக்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button