இலங்கைசெய்திகள்

வவுனியா ஓமந்தையில் கைக்குண்டு மீட்பு!!

Grenade recovery

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் கைக்குண்டு ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.

ஓமந்தை நாவற்குளம் பகுதியில் உள்ள தனியார் காணியினை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே குறித்த கைக்குண்டு அவதானிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் ஓமந்தை பொலிஸில் காணி உரிமையாளரால் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பொலிஸாரினால் குறித்த கைக்குண்டு அகற்றப்பட்டு அதனை செயலிழக்கச்செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணையினை ஓமந்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

செய்தியாளர் – கிஷோரன்.

Related Articles

Leave a Reply

Back to top button