இலங்கைசெய்திகள்

எழுத்தாளர் சிவசோதியின் நான்கு நூல்கள் வெளியீடு!!

four books

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 19.12.2021 எழுத்தாளர் சின்னத்தம்பி சிவசோதியின் நான்கு நூல்கள் வெளியீடு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு நிகழ்வு இடம்பெறவுள்ளது .

ஆன்மீகம் சார்ந்த நூல்களின் ஆசிரியரான சின்னத்தம்பி சிவசோதி எழுதிய வானம் பூச்சொரிந்து , அகத்தின் மொழி , மிர்தாதின் ஞானப் புதையல் , புத்தனின் ஞானத் தளங்கள் ஆகிய நான்கு ஆன்மீகம் சார்ந்த நூல்கள் வெளியீடு வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி ஓய்வு நிலை பீடாதிபதி கு . சிதம்பரநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது . வெளியீட்டுரையும் நூல் வெளியீடும் ஓய்வு நிலை பீடாதிபதி வவுனியா தேசிய கல்வியற் கல்லுாரி க . சுவர்ணராஜா , நூல் நயவுரையை தமிழருவி த . சிவகுமார் நிகழ்த்தவுள்ளார் . கருத்துரைகளை வவுனியா தேசியற் கல்வியற் கல்லூரி உப பீடாதிபதி பொ . சத்தியநாதன் , சு . ஜெயச்சந்திரன் முகாமையாளர் ஆசிரிய வாண்மை விருத்தி நிலையம் புளியங்குளம் , திருமதி த . நிறைமதி ஆசிரிய ஆலோசகர் , செல்வி நிவேதா சிவசோதி சட்டமானி . ஏற்புரையை நூல்களின் ஆசிரியர் சின்னத்தம்பி சிவசோதி நன்றியுரையை திருமதி மதுஷா சித்தாத்தன் விரிவுரையாளர் மொறட்டுவ பல்கலைக்கழகம் ஆகியோரும் நிகழ்த்தவுள்ளனர் .

செய்தியாளர் கிஷோரன்.

Related Articles

Leave a Reply

Back to top button