![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/09/fire-dh-14-1113402-1653766961.jpg?resize=700%2C394&ssl=1)
இத்தாலியின் மிலன் நகரில் உள்ள இரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சான் கியுலியானோ மிலானிஸின் நைட்ரோல்சிமிகா ஆலையில் திடீரென தீப்பிடித்த நிலையில் அது மளமளவென ஆலை முழுவதும் பரவியது.
அங்கிருந்த பொருட்கள் வெடித்து சிதறியதுடன், அடர்த்தியான கரும்புகையுடன் தீப்பிழம்பாக காட்சி அளித்தது..
விபத்தின் போது ஆலையில் இருந்த தொழிலாளர்களில் 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலின்பேரில் விரைந்து 10இற்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.