இலங்கைசெய்திகள்

பரீட்சை எழுதிவிட்டு சுற்றுலா சென்ற சிறுமி மரணம்!!

death

திருகோணமலை – பாசல்மாவத்த -ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த 10 வயதான ஸானி ஹன்சலா திருகோணமலையில் நீரில் மூழ்கி சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (22-01-2022) சனிக்கிழமை மாலை திருகோணமலை இறக்கக்கண்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி கன்னியா வீதி- மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 10 வயதான அயோத்யா எனவும் தெரியவருகின்றது.

மேலும், சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

இன்று புலமைப்பரிசில் பரீட்சை எழுதிவிட்டு தனது வகுப்பாசிரியருடன் இறக்கக்கண்டி பகுதிக்கு சென்றபோது பாலத்துக்கு அருகில் உள்ள கடலில் நீராடிய போதே குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

நீரில் மூழ்கிய சிறுமி அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button