இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மத்திய வங்கியில் 50 இலட்சம் காணாமல் போனமை தொடர்பில் தொடரும் விசாரணை!!
Central bank

மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து 50 இலட்சம் ரூபா காணாமல் போனமை தொடர்பில் இன்றும் ஐந்து பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு – கோட்டை காவல்துறை முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு புலனாய்வு பிரிவினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது எனவும் பணம் திருடப்பட்டுவிட்டதா அல்லது பணக்கட்டு அவதானிக்கப்படவில்லையா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய வங்கியிலும் உள்ளக் விசாரணைகள் இடம்பெறும் நிலையில் கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையத்தில் மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலர் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.