![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/05/IMG-20230509-WA0004.jpg?resize=656%2C621&ssl=1)
ஐவின்ஸ் தமிழ் செய்தி இணையதள கல்விப் பிரிவு மற்றும் வளர்மதி கல்விக் கழகம் இணைந்து பிரணவன் அறக்கட்டளையின் அனுசரணையுடன் நடாத்தும் சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள தென்மராட்சி மாணவர்களுக்கான நேரடி கருத்தரங்கில் இன்றைய தினம் ( 09.05.2023 – செவ்வாய்க்கிழமை கிழமை ) கணித பாட கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
யாழ். நகர முன்னணி ஆசிரியரான திரு. எஸ் . மணிமாறன் (யாழ். மத்திய கல்லூரி) அவர்கள், கணித பாட நுட்பங்கள் பற்றியும் பரீட்சைக்கான எதிர்பார்ப்பு வினாக்கள் குறித்தும் விடையளிக்கும் முறைகள் குறித்தும் தெளிவாக விளக்கவுள்ளார்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/05/IMG-20230501-WA0010-3-723x1024.jpg?resize=708%2C1003&ssl=1)
இக் கருத்தரங்கானது ஐவின்ஸ் தமிழ் யூரியூப் தளத்தில் நேரடியாகவும் ஒளிபரப்பப்படவுள்ளதால் நாடு பூராகவுமுள்ள மாணவர்கள் இணைந்து பயன்பெறுமாறு மட்டுவில் வளர்மதி கல்விக் கழகத்தினரும் ஐவின்ஸ் தமிழ் இணைய தளத்தின் கல்விப் பிரிவினரும் தெரிவித்துள்ளனர்.