செய்திகள்புலச்செய்திகள்

கராஜ் போய்ஸ் நண்பர்களின் ஏற்பாட்டில் அமைந்த தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலை திறந்து வைப்பு ( முழுமையான படங்கள் இணைப்பு)!!

Help

கராஜ் போய்ஸ் நண்பர்களின் ஏற்பாட்டில் 6 வது உதவிச் செயற்றிட்டத்தில் அமைந்த தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலை 14.08.2022 நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்ணன் ஆலய வீதி, மட்டுவில் தெற்கு என்னும் இடத்தில் திறந்து வைக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.மௌன வணக்கம், மங்கள விளக்கேற்றல், இறை வணக்கம், வரவேற்புரை, எனத் தொடர்ந்த நிகழ்வில்

பெயர்ப்பலகையினை கனடா கராஜ் போய்ஸ் நண்பர்கள் குழுவில் ஒருவரான ஜெயசீலன் – வசந்தி தம்பதியினர் திரைநீக்கம் செய்தனர். பின்னர் கனடா கராஜ் போய்ஸ் அங்கத்தவர் திரு.தயாசீலன் மற்றும் கடனாவைச் சேர்ந்த திரு.சுந்தரலிங்கம் ஆகியோரால் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து இயந்திரம் இயக்கப்பட்டு , புது வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டது. மரக்கன்றுகள் வழங்கப்பட்டு நன்றி பகிர்தலுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றது.

இந்த நிகழ்வில் கிராம சேவையாளர், திரு. சுபாசன், பிரதேச சபை உறுப்பினர் மதன் உட்பட சமூக ஆர்வலர்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button