![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/22-62d24a5d78a4b.jpeg?resize=600%2C400&ssl=1)
பதவியை இராஜினாமா செய்த பின்னரும் மக்களுக்காகத் தொடர்ந்து சேவையாற்றுவேன் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட கடும்பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர்போராடங்களை முன்னெடுத்திருந்த நிலையில் முன்னாள் ஜானதிபதி கோட்டாபய நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதுடன், தனது பதவியையும் இராஜினாமா செய்துள்ள நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்ட அவரது இராஜினாமா கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.