இலங்கைசெய்திகள்

வவுனியாவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மக்கள் சந்திப்பு!!

vavuniya

13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தினால் ஏற்படவுள்ள பாதிப்பு என்ற தலைப்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் வவுனியா தெற்கிலுப்பைகுளம் கிராமத்தில் இன்று (09) பிற்பகல் இடம்பெற்றது.

கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பிலும் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

குறித்த கூட்டத்தில் கட்சியின் சட்ட ஆலோசகர் காண்டீபன், கட்சியின் ஊடக பேச்சாளர் சுகாஸ் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

செய்தியாளர் – கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button