இலங்கைசெய்திகள்

அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யக்கோரி மேற்கொண்டுவரும் உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இரத்தினசிங்கம் கமலாகரன், வைத்தியலிங்கம் நிர்மலன் மற்றும் பத்மநாதன் ஜங்கரன் ஆகியோரே சாவகச்சேரி மற்றும் கிளிநொச்சியில் வைத்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளே உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உறவினர்களும் கைதிகளுக்கு ஆதரவாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இரண்டாவது நாளாகவும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button